ஆதிசிவன் அற்புதம்
அடடா! அடடா! அற்புதமே! ஆதிசிவன் மடி அற்புதமே! காதில் சொல்பவன் அற்புதமே ! கார்த்திகேயன் அவன் அற்புதமே! வாரி அனைத்திடும் வானவன் கரங்கள் ; பாசம் காட்டிடும் பரமனின் கண்கள் ! மடியேறி அமர்ந்திடும் மழலை முருகன்; மந்திரம் சொல்லி தந்திடும் தலைவன் ! சொல்வதை அன்புடன் ஏற்றிடும் ஈசன்; சொல்லி தந்தவன் சுவாமி நாதன்! நல்லதை ஏற்க நாடகம் புரிந்தவன்; நமசிவாயனே நம்மை காப்பவன்! அற்புதம்! அற்புதம்! அற்புதமே ! ஆதிசிவன் என்றும் அதிசயமே!