Posts

Showing posts from March, 2023

முழுமதி சூடிய அழகர்

திங்களார் முழுமதி கரைந்த பிறை தனை தன்முடி சூடிய அழகரோ? மங்கையார் யெனும் பனி கங்கையை  தன் தலைதனில் மறைத்த கள்வரோ? அரவலார் வாசுகி உமிழ் நச்சதில் வீழ்ந்த  தேவ வசுரரை காத்த நீலகண்டரோ? சடையராய் சிவந்த தீயதில் எரியும் சுடலையை காவல் கொள் சித்தரோ? ருத்ரராய் எழுந்த கால் உயர்ந்து சீரிய ; தாண்டவம் தந்த நடராஜரோ? அப்பராய் அம்மையை தன் உடல் தந்து  தான் கொண்ட தாயுமானவரோ? தோழராய் கிழவராய் நல் வேடங் கொண்டு தொண்டரை யாட்கொண்ட ஈசரோ?   யாரவர்? யாரவர்? யாரவர்? தான் யிவர்  பேரெதும் கொண்ட பித்தரோ? பாருளர் யாவரும் பாதம் பணிந்திடும்  யெம் நல்லருள் நமசிவாயரே! நமசிவாயரே!

வேறென்ன வேண்டும் வேங்கடனே

வேறென்ன வேண்டும் வேங்கடனே வேடிக்கையில்லை வேங்கடனே, வேண்டும் கரங்களில் வேங்கடனே;  விரைந்து தருவாய் வேங்கடனே, உன்முகம் காணும் நாளது வேண்டும்; உடனே அதுவும் நீ தர வேண்டும், உண்மை உணரும் உளமது  வேண்டும்;  உதட்டில் உனது நாமம் வேண்டும், திருமண் மறைக்கும் முகமது வேண்டும்; தீங்கில்லாத தோள்களும் வேண்டும், சங்கு சக்ர கோலம் காட்டும்;  கண்ணன் கண்களை காணவும் வேண்டும், மயக்கும் மாலையில் மாயவன் வேண்டும்; மண்ணைத் தின்ற வாயதும் வேண்டும்,  இருளின் அழகு வண்ணம் வேண்டும், பொன்னாய் மின்னும் உருவமும் வேண்டும், கரங்களின் குறும்பை காண வேண்டும்;  காளிங்க நடனமும் காட்சியில் வேண்டும், கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேண்டும்;  கண்ணனின் கால்களை கழுவவும் வேண்டும், வேண்டும் வேண்டும் வேறென்ன வேண்டும்; வேங்கடன் கோலம் கண்முன் வேண்டும்.

குரு ராகவேந்திர

 ராகம்:மலஹரி  தாளம்: ரூபகம்      பல்லவி: ஸரிம,,,கரி/ஸரி கரிஸ,,,    அனு பல்லவி ரிம பதமப/ தப மகரிஸ குருவாய்,,,நின்று,அருள் தருவோனே, மேகம் தந்த மழையால், மண்ணில் விளைந்த கதிரே            சரணம் மப தஸஸரி/ரிஸ தபமப ரிம பதமப/தப மகரிஸ வாழ்வது தந்த மண்ணை  வாழ வைத்த மழையாய், நீயும் பிறந்து எம்மை, நிம்மதி தந்து காத்தாய் ஆதவன் தந்த ஒளியில், மலர்ந்த தாமரை மலராய் மத்வர் சொன்ன வழியில், மனிதர் வாழ்ந்திட செய்தாய் குருஉன் விழியே சாட்சி, நிலவின் அற்புதக் காட்சி கண்டது வாழ்வின் ஆட்சி, குருவின் முகமே மாட்சி

அருள்வாய் வாணி கலைவாணி

 ராகம் :மோகனம்  தாளம்: ரூபகம் கக ப,ப,/தப ஸ,ஸ,//) வருவாய் நீ,,யே,,அருள்வாய்  தா,,யே,, (ரிஸ ததப,/தப ககரி//) உனை நான் காண,அருள்வாய் வாணி, கப தஸதப/தப ககரி) கல்லும் பேச வைத்த, கருணை நீயே தாயே  (கக தபகரி/பக ககரிஸ) காளி தாசன் நாவில், கவிதை தந்த வாணி  (கக ககரிக/பக ப,ப,) பாடல் பாடிஉன்னை ,பார்த்து நின்றேன் தாயே (கக தபத,/தப ஸ,ஸ,) பாடும் பொருளே நீயே, பாடல் தந்த வாணி  (தக ரிரிஸஸ/தஸ த,தப) மீட்டும் வீணை கானம், காற்றில் பிறந்த ஞானம் (கப தஸதப/தப ககரிஸ) இதயம் இறங்கி இனிக்கும், என்றும் உந்தன் கானம் (ஸரி க,க,/கரி பகரி,) அருள் தா,நீ, வாநீ கலைவாணி (ஸரி ஸகரிஸ)  வா நீ தா நீ வாணி

அழகு முருகன்

 ராகம் : மலகரி  தாளம்:ரூபகம்  கண்ணோ  அது கருணை மழையோ(ஸ ரி ம,,கரி/ஸரிகரிஸ//), காணும் காட்சி நனவோ, காண்பது வேலனின் முகமோ(ரிம பதமப/தப மகரிஸ//) எத்தனை அமைதி உன்முகமே,  ஏங்கும் விழிகள் என்னிடமே(மப தஸஸரி/ரிஸ தபமப//) விரலின் பிடியில் வேலிருக்க, வேறெது வேண்டும் காத்திருக்க(ரிம பதமப/தப மகரிஸ//) தோளின் மாலை மனமே, தோழன் உந்தன் உளமே(மப தஸஸரி/ரிஸ தபமப//) காவி காட்டும் நிறமே, கந்தன் வெற்றிக் கொடியே(ரிம பதமப/தப மகரிஸ//) என்னே அழகு முருகா, மண்ணை காத்திடு மருகா(மப தஸஸரி/ரிஸ தபமப//) நீயே துணையாய் வருவாய், துன்பம் நீக்கி அருள்வாய்(ரிம பதமப/தப மகரிஸ//)

நமசிவாய வாழ்க

வளர்த்த சடையும் வானின் நிலவும்,  வளைத்த நாகமும் மார்பின் ருத்ராட்சமும், வலம்புரி சங்கும் வளைத்த தோளும்,  உடுக்கையும் சூலமும் உடலின் சாம்பலும்,  என்றும் காக்கும் ஈசனின் கரமும் , கண்டது கண்களே, நமசிவாயனின் வரமே

அன்னை காளி

கல்லும் மண்ணாய் கரைந்து ஓடும் ஆற்றின் வெள்ளத்திலே, காலத்தின் வலியும் காட்சியில் மாறும் காளியின் அருளாலே, தீயாய் எரிந்து மேலே உயர்ந்து வீழும் மழைபோலே, கண்ணால் எரித்து இதயம் குளிர்ந்து காப்பதும் தாயவளே, எரியும் திரியில் எண்ணை வளர்த்து ஒளிரும் தீபம் போல், ஏங்கும் இதயத்தை இதமாய் தடவி காத்திடும் கரமவளே, சிவப்பு ஆடையும் மாலையும் சூலமும் சூடிட நின்றவளே, சிறிதும் இல்லை கவலை இல்லை காப்பாய் தாயவளே!

கீதையை தந்தவன்

வான்போல் நிறம் கொண்ட வண்ணன்; வாசலின் மண் தின்ற கண்ணன், வாயை திறந்தே அன்னையின் கண்களில் அகிலமும் காட்டிய மன்னன்; நீல வண்ணன் கண்ணன்; நெஞ்சில் நிலைத்த மன்னன்! வேதம் நான்கிலும் வேராய் நின்றவன்; வியாசன் வளர்த்த தீயாய் வாழ்ந்தவன்; மண்ணைக் காக்க மானுடனாய் வந்து;  மனதில் நிலைத்த மன்னன்! மேக வர்ணன் கண்ணன், மாயங்கள் செய்த மன்னன்! எரியும் தீபத்தின் ஒளியாய் ஆனவன்; எல்லாம் அவனே!என்று நிலைத்தவன், வேண்டும் கரங்களின் தன்மை அறிந்தே;  தன்னை தந்தவன் மன்னன், பார்த்தனின் சாரதி கண்ணன்;  கீதை தந்தவன் மன்னன்!

அன்னை லலிதாம்பிகை

மல்லிகை மாலை சூடி தேவி கண்கள் திறந்திருப்பாள், தங்க கிரீடம் தவழும் நிலவும் தாங்கி தேவி காட்சி தந்திடுவாள், காலை மடித்து சலங்கை யணிந்து தேவி அமர்ந்திருப்பாள், காக்கும் கரங்கள் கண்களில் காட்டி தேவி காத்திருப்பாள், ஆதி தேவி அற்புதம் செய்தவள் அகிலம் காத்திருப்பாள், அன்னை லலிதாம்பிகை அவள்  ஆனந்தம் தந்தே நம்மை காத்திடுவாள்,

குரு ராகவேந்திர

கண்கள் காணும் கனவிதுவா? இல்லை வாழ்வது காட்டும் நனவிதுவா? உணர்வில் தோன்றிய உயிரிதுவா?இல்லை உயிரில் தோன்றிய உணர்விதுவா? மண்ணில் விளைந்த பொன்னிதுவா?இல்லை பொன்னது மறைந்த மண்ணிதுவா? வாழ்வது தந்தது தத்துவமா?இல்லை தத்துவ மானது வாழ்வதுவா? என்னது? என்னது? என்னயிது? எங்கள் குருவே என்னயிது? உன்னை கண்ட கண்களிது, உண்மையில் புண்ணியம் செய்ததிது! உன்னை தொழுத கரங்களிது, உயர்ந்தது பண்பில் உள்ளமது! உதட்டில் உனது நாமமது, செவியது கேட்கும் கீதமது! ராகவேந்நிரா!எனும் கீதமது, இதயத்தில் இறங்கிய ராகமிது! எங்கள் குருவின் ராகமிது, ராகவேந்திரா!எனும் கீதமிது!

தெளிந்த காவிரிதான்

காற்றின் ஒலியில் கற்பனை கலந்து கானம் தந்தது யார்? பேசும் மொழியில் பாசம் கலந்து பாடல் தந்தது யார்? ராம நாமத்தை ராகத்தில் நனைத்து' விந்தைகள் செய்தது யார்? விடியற் காலையில் வீதியின் கோலம்' இசையால் வரைந்தது யார்? இன்னிசை தந்தது யார்?இசையாய் வாழ்ந்தது யார்? பிறந்தால் முக்தி தந்த ஊரில்' பிறந்த (தியாக) ராஜர் தான், ஐயாற ப்பன் அன்பால் அழைத்து' அணைத்த(தியாக) ராஜர் தான், பஞ்ச நதிகளின் பாசத்தில் வளர்ந்த பாடும் பறவை தான், பட்டா பிசேக ராமர் புகழை ராகத்தில் தந்தவர் தான், தேனாய் இனிக்கும் கீதத்தின் ஒலியை தேடித் தந்தவர் தான், தேகம் கரைந்து உணர்வில் தெளிந்து ஸ்ரீராமனை கண்டவர் தான், தெளிந்த ஓடையாய் காவிரி தந்த தீரா அமுதம் தான், திகட்டா இனிப்பாய் இன்னிசை தந்த தியாக ராஜர் தான், தெளிந்த காவிரிதான்,அவர் தியாக பிரம்மம் தான்

மாரி அவள் கோலம்

பட்டு சேலை  பன்னீர் மாலை பார்க்க கண்வேணும்,  பாதை தெரியா தவிக்கும் எங்கள காக்க நீ வேணும், தங்க நகையும் மஞ்ச முகமும் மாரி அவ கோலம், தவிக்கும் மனசு துடிக்கும் உசுரு பாப்பது எக்காலம், வேலும் சூலமும் கண்ணுல கோவமும் காக்கும் எந்நாளும்,  வேண்டி நின்னோம் ஓட்டிரு தாயே நோய இந்நாளும், வேப்பில சட்டி தீய கொட்டி நடப்போம் முன்னால,  வேதனை யில்ல சோதனை யில்ல தாயவ கண்ணால, மாரி உன்னால மழையும் தன்னால, உலகம் உன்னால மாறிடும் தன்னால,

ஈசன் தந்த காட்சி

கரங்கள் காட்டும் கருணை மழையில் கரைந்து போனோம் இன்று, கண்கள் காட்டிய காட்சியால் உள்ளம் உறைந்து போனோம் நின்று, எத்தனை அழகிய காட்சியை தந்தான் ஈசன் எம்முன் வந்து, தாயுடன் குழந்தைகள் கொண்டவன் கோலம் கொள்ளை கொண்டது இன்று, கங்கை மங்கை கணேசன் குமரன் கண்டோம் ஒன்றாய் இன்று, காலமகன் அவன் காட்டிய கருனை என்றும் நிலைக்கும் நின்று, ஒலிக்கும் உடுக்கை கேட்டு சீறும் நாகம் கழுத்தில் நின்று, ஓம் என்றும் ஒலிக்கும் இதயத்தில் இனிக்கும் ஈசன் நாமம் இன்று, மூன்றாம் பிறையும் மூன்றாம் கண்ணும் உரைக்கும் தத்துவம் ஒன்று, நெருப்பாய் எரிந்து நீராய் குளிரும் நிலைக்கும் வாழ்வு என்று, காளையும் மயிலும் மூசிகமும் உணர்த்தும் உண்மை ஒன்று, பல்லுயிர் போற்றும் பாரே நமக்கு என்றும் வேண்டும் என்று, காட்சியில் உண்மை காட்டிய தலைவன் பாதம் பணிந்தோம் நின்று, நமசிவாயமே நாளும் காப்பாய் நல்லது தெளிந்தோம் இன்று!

அன்னை தாயே

இருண்ட வானை இதய சுமையுடன் பார்த்து நின்றேனே, இருளின் கண்களும் இமையை திறக்க ஏங்கி நின்றேனே, கனவை கலைத்து கண்கள் திறந்து காத்து நின்றேனே, கண்ணின் நீர்துளி மண்ணை நனைக்க மயங்கி நின்றேனே, எந்தன் விழிகளின் ஏங்கிய தவத்தால் ஒளியை கண்டேனே, இருளை வென்ற ஒளியாய் தாயே உன்னை கண்டேனே, ஒளியின் கரங்கள் இருளை விலக்கி காட்டும் உன் முகமே, தாயின் விழிகளும் கரும்பு வில்லும் கண்டது புண்ணியமே, தங்க முகமாய் தவழும் மதியாய் தாயை கண்டேனே, தாயின் கருணை மழையில் நனைந்து தன்னை மறந்தேனே, என்னை காக்க இறங்கி வந்தவள் உன்னை கண்டதுமே, இதயசுமைகள் இறங்கி ஓடிட என்னை மறந்தேனே,

எளிய விநாயகன்

அரசின் மடியில் வேம்படி நிழலில்'  வினையை தீர்ப்பவன் வீற்றிருப்பான்; விரைந்து கரங்கள் வணங்கி சென்றிட'  வேடிக்கையாய் நம்மை பார்த்திருப்பான், பிடித்த பிடியில் பிள்ளையார் ஆனவன்' பிரியமுடன் நம்மை காத்தி ருப்பான், வேண்டும் எல்லாம் விரைந்து தருபவன்' வேறு கோலமும் காட்டி நிற்பான், காணும் கண்களில் அதிசய மாய்'  காட்சியின் ஒளியாய் கரைந்து நிற்பான்'  வாமணன் காட்டிய வண்ணம் போல்'  மாமனின் மா உரு காட்டி நிற்பான், பத்து தலைகளும் பாசக் கரங்களும்'  பதினொன் றாய் அவன் முகம்காட்டும், எழுந்த இமயத்தின் பெருந் தோற்றம்'  எழும் இடையுடன் விலகி நின்றோடும், பாயும் குதிரைகள் பாய்ச்சல் எல்லாம்'  பாதத்தின் வலிமை பறைசாற்றும், ஆதியும் அந்தமும் காட்டி நிற்கும் '  ஆதிசேட னவன் அருட் குடையுடனே, விடியும் காலை கதிரவன் போல்'  விரைந்து அருள்தரும் நாயகனே, விஸ்வ ரூபமதில் உன்னை கண்டோம் ' எங்களின் எளிய விநாயகனே!

கார்த்திகேயன்

காணும் கண்கள் பெறும் பேர் இதுவே; கார்த்தி கேயன் அவன் காட்சியின் வடிவே, கைகளில் வேலும் சேவற் கொடியும்  காக்கும் பொருளே கந்தனின் வடிவே; கண்களின் ஒளியும் காவலன் கரங்களும் கண்முன் காட்டும் காவியம் இதுவே, காதல் மனைவியர் கந்தனின் துணைவியர் இணைந்து தோள்தரும் குமரனின் தேவியர்; கூடிய கோலம் குமரனின் ஜாலம்  கண்களின் காட்சி கண்டது ஆட்சி, கார்த்திகை பெண்களின் கரங்களின் பெருமை  கார்த்தி கேயன்அவன் காவலன் உண்மை; வேர்கள் சொல்லும் விருட்சத்தின் பெருமை வேலவன் காப்பது விடியலின் உண்மை

குரு ராகவேந்திர

எல்லா சுமைகளும் இறக்கி வைக்க இடமொன்று இருக்குதம்மா, இதயத்தின் காயத்தை இதமாய் தடவ கரங்களும் இருக்குதம்மா! எதையும் தேடி எங்கும் செல்ல அவசியம் இல்லையம்மா, மந்திராலய மண்ணின் மகிமையால் எல்லாம் கிடைக்குமம்மா! கண்களின் நீரை துடைக்க குருவின் கரங்கள் இருக்குதம்மா,அவன் கருனை மழையில் நனையும் உடலில் நிம்மதி பிறக்குமம்மா! கால்கள் நடந்து கண்கள் மலர்ந்து கருத்தைச் சொன்னதம்மா, மா தவ முனிவரின் மகிமையை சொல்ல மொழியும் இல்லையம்மா! மத்வரின் சீடர் மனது, வைத்தால் எந்த கல்லும் கரையுமம்மா, மந்திராலய மண்ணை பணிந்தாள் மயக்கம் தெளியுமம்மா! துங்க பத்திர நீரால் உள்ளம் தூய்மை யாகுமம்மா, மூல பிருந்தா வனத்தை கண்டதும் துன்பங்கள் மறையுமம்மா! எல்லாம் தருவனம்மா! ஏன் இந்த கவலையம்மா! குருவின் கருணையம்மா!குறையொன்றும் இல்லையம்மா!

அன்னை சியாமளா

சிந்திக்க வைப்பாள் சியாமளா தேவி; சிந்தனை வடிவம் சியாமளா தேவி, கண்கள் காணும் அவள் தன் வடிவம்; காண்போர் புண்ணியம் கருணையின் வடிவம், மாதவம் செய்தவள் மாதங்கி யானவள்;  மதங்க மாமுனியின் மகளுமானவள், அன்னை காளியின் கரும்பு வில்லானவள்; காளிதாசனின் நாவில் நின்றவள்,  அறியும் அறிவும் அமைச்சு மானவள்; அற்புத வீணையின் நாதமானவள், பச்சை வண்ண கோலம் கொண்டவள் ; பாதை தருபவள் பாசம் கொண்டவள், அருளும் கரங்களில் அன்பை கொண்டவள்; அன்னை அவளே சியாமளா தேவி

அன்னை தேவி

ஆயிரம் மலர்கள் ஆளும் வண்ணங்கள் அன்னை மலர் முகமே, ஆனந்தம் தந்திடும் ஆசிகள் வழங்கிடும் அன்னை திரு முகமே, அன்னை அவள் முகமே,ஆனந்த பெரு வெள்ளமே, நம்பிக்கை நாயகன் தும்பிக்கை யான் அவன் கொண்டது அவள் மடியே;  தாயின் தலைமகன் தவளும் மடியே தாமரை யானதுவே, தம்பி வேலவன் வேலுடன் அழகன் இடது மடியினிலே ; செல்லப் பிள்ளை செல்வ குமரன் சேர்ந்ததும் தாயை மடியே, அன்னை தேவி ஆசை குழந்தைகள் உலகின் நிலையிதுவே; ஆளும் ஈசன் அன்னை சக்தி காக்கும் கதையிதுவே

அன்னை லஷ்மி

தாமரை மலராய் தங்க நிலவொன்று தவக்கோலம் காட்டி நிற்கும், தவழ்ந்து வானில் வலம் வந்து வாசல் வழியினை திறந்து நிற்கும், கண்கள் கண்டதும் தாயவள் புன்னகை மலர்ந்து மனம் நிறைக்கும், மண்ணில் மலர்ந்த கால்களில் பணிந்தே கரங்கள் வணங்கி நிற்கும், இருண்ட இல்லம் தாய் தந்த ஒளியால் பொன்னாய் மலர்ந்திருக்கும், அன்னை அவள் தந்த ஆனந்த வெள்ளம்  உள்ளம் நனைத்திருக்கும், ஊரும் உறவும் உலகம் மகிழ ஒன்றாய் இணைந்திருக்கும், உன்னைக் கண்டதும் தாயே லட்சுமி கண்கள் பனித்திருக்கும்

காலத்தை வென்ற காலபைரவர்

காலத்தை வென்று நிற்பார் கால பைரவர்; காவலுக்கும் வந்து நிற்பார் காலபைரவர், அஷ்ட திக்கும் ஒளியானர் காலபைரவர், அஷ்டமியில் அருள் தருவார் காலபைரவர், எலும்பு மாலை அணிந்திருப்பார் ஈசன் காவலர், சூலம் மழு கரம் கொண்ட கால பைரவர், நடுநிசியில் உலவும் வீரர் நமது காவலர்; நண்பகலாய் ஒளி தருவார் காலபைரவர், சனிப் பிணியில் நம்மை காப்பார் காலபைரவர்; நல் லஷ்டமியில் நாம் வணங்கும் அஷ்ட பைரவர்

பறந்தோடி வந்த விட்டல்லா

கண்ணாற உனைக் கண்டேன் விட்டல்லா,என் கண்ணாற கண்டேன் விட்டல்லா, திரு நாமம் அலங்காரம் திரு மாலின் அவதாரம் பூமாலை தோள் கொள்ள கண்டேன் உனை விட்டல்லா, பறந்தோடி வந்தேன் விட்டல்லா,  பக்தன் தன் பசியாற; கண்ணாலே உனைக் காண ; பண்டரிபுரம் நின்ற; பரந்தாமன் கால் பணிய ; வந்தேன் விட்டல்லா, நதியோரம் நீராடி ; தாய் தந்தை பசியாற்றி; பணிசெய்யும் பக்தனவன்; கண்முன்னே காட்சி கொண்ட ; கண்ணா உனை நான் காண ; பறந்தோடி வந்தேன் விட்டல்லா, பரந்தாமன் பலராமன் ;பார் காத்த யதுவீரன்; பண்டரிபுரம் தந்த பாண்டுரங்கன்  உனைக் காண ; பறந்தோடி வந்தேன் விட்டல்லா!

முருகன் முருகன் அழகன்

முருகன் முருகன் அழகன்  கதிர்வேல் முருகன் அழகன், கந்தன் கை வேல் அழகன்  கண்களின் இமையாய் அழகன், மனதில் நிலைத்தவன் அழகன் மண்ணின் வேராய் அழகன் மழையாய் நீராய் அழகன் நதியாய் நடப்பவன்அழகன், நலம் தரும் மருந்தவன் அழகன் நல்வழி தந்தவன் அழகன் அழகன் முருகன் அழகன் அருள்வான் முருகன் அழகன்

வென்ற விநாயகன்

எத்தனை அழகிய கோலம் காண்பது எங்கள் அருமை விநாயகன் தந்தது; கற்பனை மீறிய காட்சி யானது காணும் கண்களில் சாட்சி யானது, தாயின் செல்லப் பிள்ளை யானது தகப்பன் தந்த தலைதனை கொண்டது; அரச மரத்தின் நிழலில் வாழ்வது ஆறுதல் சொன்னது ஆயுள் தந்தது, வேழ முகத்தால் வேதனை தீர்த்தது வெற்றி மாலையை தோளில் கொண்டது; கைதனில் காசுகள் காட்டி நின்றது கருணை மழையாய் கொட்டித் தந்தது, கங்கையை கண்களின் கருணை வென்றது கால்கள் நிலைத்து பூமியை காத்தது; அத்தனை கரங்களும் அன்பை சொன்னது அம்மை யப்பனின் மகனாய் வென்றது

ஹரியே எங்கள் விழியே

காண உன் மேனியின் அழகே;  கண்களில் ஒளி இல்லை ,ஹரியே, கண்களே எந்தன் ஒளியே; காட்டிடு ஹரியின் வடிவே, காட்டிடு ஹரியின் வடிவே! கரிய மாலவன்; காத்திடும் காவலன்; கண் கொள்ளா பொன் வண்ண வடிவே;  கண்களில் காட்டிடு ஹரியே,  கண்டிட வேண்டும் விழியே! விடியலின் தாகம்; கதிரவன்வேகம்;  விரைந்திடும் வேங்கடன் மலையே, பணிந்திடும் பாதம் ஹரியே! பார்த்திட வேண்டும் விழியே!

தாயி மகமாயி

சித்தாடை செவ்வாடை காட்சி தரும் ;தாய கண்ணால கண்டால கோடிபெறும், பட்டாடை நகையெல்லாம் பவுசு தரும்; தாய பார்த்தாலே பணங்காசு தேடிவரும், ரோசாப்பூ பூமாலை மல்லியெல்லாம்; தாயி தோள்மேலே தோள் சாஞ்சு வாசந்தரும், வாடாத புன்னகை வாழவைக்கும்; தாயி தயவால மழைமாரி தானா வரும், ஊரெல்லாம் பயிராகி சோறு தரும் தாயி மகமாயி மனசுவைச்சு எல்லாம் தரும்

குரு ராகவேந்திர

 கண்கள் காண்பது யார்?மனமே  கருணையின் வடிவாய் காவியின் நிறமாய் கண்கள் காண்பது யார்? உயிரின் புன்னகை பார் மனமே  ஒளி தந்த முகமதில் உலகின் விடியலில் உயிரின் புன்னகை பார்! நம்பிக்கை தந்தவன் நரசிம்ம கோலத்தை நம்மில் விதைத்தவன் மண்ணை மருந்தாய் மாற்றித் தந்தவன்  மலர்ந்த முகமதைப் பார்! தீமைகள் களைந்தவன் திருமால் பெருமையில் தினமும் திளைத்தவன் மூலராமனை இதயம் கொண்டவன்  மந்திராலய மன்னன் முகமதைப் பார்! எத்தனை அமைதி பார் அவன் இதயத்தின் கருணை பார்  எல்லாம் தருபவன்  என்றும் நிலைத்தவன் கண்களின் ஒளியைப் பார்!

ஈசன் காட்சி எங்கும் ஒளியை தந்தது

 எரியும் விளக்கில் எண்ணெய் நின்று எங்கும் ஒளியை தந்தது, எங்கள் ஈசன் காட்சி கண்டு கண்கள் இமைக்க மறந்தது; கரங்கள் ஒன்றாய் குவிந்தது, நமசிவாய என்னும் நாமம் உதட்டில் ஓங்கி ஒலித்தது, நாவின் ஓசை செவியில் இறங்கி உயிரில் கலந்து நின்றது; உண்மை உணர்ந்து கொண்டது, ஈசன் தோள்கள் மாலையணிந்து இனிய கோலம் கொண்டது, ஈடில்லாத இறைவன் கருணை இதயம் கொள்ளை கொண்டது; எங்கும் ஒளியை தந்தது

பிள்ளையார் என்றே பேரு

வெள்ளை நிலவின் பிறையாய் அழகாய்  பேறு கொண்டவன் யாரு பிரிய முள்ளவன் பிடித்து வைத்தவன் பிள்ளையார் என்றே பேரு காலங் காலமாய் காவல் தெய்வமாய்  காக்கும் கடவுள் யாரு  அரச மரத்திடை ஆளும் வேம்புடன்  ஆட்சி செய்பவன் பேரு பெற்ற தாயவள் உற்ற பிள்ளையாய்  உலகை யாள்பவன் யாரு ஊரும் பேருமாய் உயிர்கள் வாழ்ந்திட   உற்ற துணை யவன் பாரு பிள்ளையார் என்றே பேரு  பிள்ளையார் என்றே பேரு