அன்னை தேவி
ஆயிரம் மலர்கள் ஆளும் வண்ணங்கள் அன்னை மலர் முகமே,
ஆனந்தம் தந்திடும் ஆசிகள் வழங்கிடும் அன்னை திரு முகமே,
அன்னை அவள் முகமே,ஆனந்த பெரு வெள்ளமே,
நம்பிக்கை நாயகன் தும்பிக்கை யான் அவன் கொண்டது அவள் மடியே;
தாயின் தலைமகன் தவளும் மடியே தாமரை யானதுவே,
தம்பி வேலவன் வேலுடன் அழகன் இடது மடியினிலே ;
செல்லப் பிள்ளை செல்வ குமரன் சேர்ந்ததும் தாயை மடியே,
அன்னை தேவி ஆசை குழந்தைகள் உலகின் நிலையிதுவே;
ஆளும் ஈசன் அன்னை சக்தி காக்கும் கதையிதுவே
Comments
Post a Comment