அன்னை சியாமளா

சிந்திக்க வைப்பாள் சியாமளா தேவி;

சிந்தனை வடிவம் சியாமளா தேவி,


கண்கள் காணும் அவள் தன் வடிவம்;

காண்போர் புண்ணியம் கருணையின் வடிவம்,


மாதவம் செய்தவள் மாதங்கி யானவள்; 

மதங்க மாமுனியின் மகளுமானவள்,


அன்னை காளியின் கரும்பு வில்லானவள்;

காளிதாசனின் நாவில் நின்றவள், 


அறியும் அறிவும் அமைச்சு மானவள்;

அற்புத வீணையின் நாதமானவள்,


பச்சை வண்ண கோலம் கொண்டவள் ;

பாதை தருபவள் பாசம் கொண்டவள்,


அருளும் கரங்களில் அன்பை கொண்டவள்;

அன்னை அவளே சியாமளா தேவி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்