ஈசன் காட்சி எங்கும் ஒளியை தந்தது

 எரியும் விளக்கில் எண்ணெய் நின்று எங்கும் ஒளியை தந்தது,

எங்கள் ஈசன் காட்சி கண்டு கண்கள் இமைக்க மறந்தது;

கரங்கள் ஒன்றாய் குவிந்தது,


நமசிவாய என்னும் நாமம் உதட்டில் ஓங்கி ஒலித்தது, நாவின் ஓசை செவியில் இறங்கி உயிரில் கலந்து நின்றது;

உண்மை உணர்ந்து கொண்டது,


ஈசன் தோள்கள் மாலையணிந்து இனிய கோலம் கொண்டது,

ஈடில்லாத இறைவன் கருணை இதயம் கொள்ளை கொண்டது;

எங்கும் ஒளியை தந்தது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்