வென்ற விநாயகன்

எத்தனை அழகிய கோலம் காண்பது

எங்கள் அருமை விநாயகன் தந்தது;

கற்பனை மீறிய காட்சி யானது

காணும் கண்களில் சாட்சி யானது,


தாயின் செல்லப் பிள்ளை யானது

தகப்பன் தந்த தலைதனை கொண்டது;

அரச மரத்தின் நிழலில் வாழ்வது

ஆறுதல் சொன்னது ஆயுள் தந்தது,



வேழ முகத்தால் வேதனை தீர்த்தது

வெற்றி மாலையை தோளில் கொண்டது;

கைதனில் காசுகள் காட்டி நின்றது

கருணை மழையாய் கொட்டித் தந்தது,



கங்கையை கண்களின் கருணை வென்றது

கால்கள் நிலைத்து பூமியை காத்தது;

அத்தனை கரங்களும் அன்பை சொன்னது

அம்மை யப்பனின் மகனாய் வென்றது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்