அழகு முருகன்
ராகம் : மலகரி தாளம்:ரூபகம்
கண்ணோ அது கருணை மழையோ(ஸ ரி ம,,கரி/ஸரிகரிஸ//),
காணும் காட்சி நனவோ,
காண்பது வேலனின் முகமோ(ரிம பதமப/தப மகரிஸ//)
எத்தனை அமைதி உன்முகமே,
ஏங்கும் விழிகள் என்னிடமே(மப தஸஸரி/ரிஸ தபமப//)
விரலின் பிடியில் வேலிருக்க,
வேறெது வேண்டும் காத்திருக்க(ரிம பதமப/தப மகரிஸ//)
தோளின் மாலை மனமே,
தோழன் உந்தன் உளமே(மப தஸஸரி/ரிஸ தபமப//)
காவி காட்டும் நிறமே,
கந்தன் வெற்றிக் கொடியே(ரிம பதமப/தப மகரிஸ//)
என்னே அழகு முருகா,
மண்ணை காத்திடு மருகா(மப தஸஸரி/ரிஸ தபமப//)
நீயே துணையாய் வருவாய், துன்பம் நீக்கி அருள்வாய்(ரிம பதமப/தப மகரிஸ//)
Comments
Post a Comment