கார்த்திகேயன்

காணும் கண்கள் பெறும் பேர் இதுவே;

கார்த்தி கேயன் அவன் காட்சியின் வடிவே,


கைகளில் வேலும் சேவற் கொடியும் 

காக்கும் பொருளே கந்தனின் வடிவே;

கண்களின் ஒளியும் காவலன் கரங்களும் கண்முன் காட்டும் காவியம் இதுவே,


காதல் மனைவியர் கந்தனின் துணைவியர்

இணைந்து தோள்தரும் குமரனின் தேவியர்;

கூடிய கோலம் குமரனின் ஜாலம் 

கண்களின் காட்சி கண்டது ஆட்சி,


கார்த்திகை பெண்களின் கரங்களின் பெருமை 

கார்த்தி கேயன்அவன் காவலன் உண்மை;

வேர்கள் சொல்லும் விருட்சத்தின் பெருமை

வேலவன் காப்பது விடியலின் உண்மை

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்