பறந்தோடி வந்த விட்டல்லா

கண்ணாற உனைக் கண்டேன் விட்டல்லா,என் கண்ணாற கண்டேன் விட்டல்லா,


திரு நாமம் அலங்காரம் திரு மாலின் அவதாரம்

பூமாலை தோள் கொள்ள கண்டேன் உனை விட்டல்லா,


பறந்தோடி வந்தேன் விட்டல்லா,

 பக்தன் தன் பசியாற; கண்ணாலே உனைக் காண ;

பண்டரிபுரம் நின்ற; பரந்தாமன் கால் பணிய ;

வந்தேன் விட்டல்லா,


நதியோரம் நீராடி ;

தாய் தந்தை பசியாற்றி; பணிசெய்யும் பக்தனவன்; கண்முன்னே காட்சி கொண்ட ;

கண்ணா உனை நான் காண ;

பறந்தோடி வந்தேன் விட்டல்லா,


பரந்தாமன் பலராமன் ;பார் காத்த யதுவீரன்; பண்டரிபுரம் தந்த பாண்டுரங்கன்  உனைக் காண ;

பறந்தோடி வந்தேன் விட்டல்லா!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்