வேறென்ன வேண்டும் வேங்கடனே

வேறென்ன வேண்டும் வேங்கடனே வேடிக்கையில்லை வேங்கடனே,

வேண்டும் கரங்களில் வேங்கடனே; 

விரைந்து தருவாய் வேங்கடனே,


உன்முகம் காணும் நாளது வேண்டும்;

உடனே அதுவும் நீ தர வேண்டும்,


உண்மை உணரும் உளமது  வேண்டும்; 

உதட்டில் உனது நாமம் வேண்டும்,


திருமண் மறைக்கும் முகமது வேண்டும்;

தீங்கில்லாத தோள்களும் வேண்டும்,


சங்கு சக்ர கோலம் காட்டும்; 

கண்ணன் கண்களை காணவும் வேண்டும்,


மயக்கும் மாலையில் மாயவன் வேண்டும்; மண்ணைத் தின்ற வாயதும் வேண்டும், 


இருளின் அழகு வண்ணம் வேண்டும்,

பொன்னாய் மின்னும் உருவமும் வேண்டும்,


கரங்களின் குறும்பை காண வேண்டும்; 

காளிங்க நடனமும் காட்சியில் வேண்டும்,


கண்களில் ஆனந்தக் கண்ணீர் வேண்டும்; 

கண்ணனின் கால்களை கழுவவும் வேண்டும்,


வேண்டும் வேண்டும் வேறென்ன வேண்டும்;

வேங்கடன் கோலம் கண்முன் வேண்டும்.

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்