கீதையை தந்தவன்
வான்போல் நிறம் கொண்ட வண்ணன்;
வாசலின் மண் தின்ற கண்ணன்,
வாயை திறந்தே அன்னையின் கண்களில் அகிலமும் காட்டிய மன்னன்;
நீல வண்ணன் கண்ணன்;
நெஞ்சில் நிலைத்த மன்னன்!
வேதம் நான்கிலும் வேராய் நின்றவன்;
வியாசன் வளர்த்த தீயாய் வாழ்ந்தவன்;
மண்ணைக் காக்க மானுடனாய் வந்து;
மனதில் நிலைத்த மன்னன்!
மேக வர்ணன் கண்ணன்,
மாயங்கள் செய்த மன்னன்!
எரியும் தீபத்தின் ஒளியாய் ஆனவன்;
எல்லாம் அவனே!என்று நிலைத்தவன்,
வேண்டும் கரங்களின் தன்மை அறிந்தே;
தன்னை தந்தவன் மன்னன்,
பார்த்தனின் சாரதி கண்ணன்;
கீதை தந்தவன் மன்னன்!
Comments
Post a Comment