குருவே அருளே

உண்மை ஒன்று சொல்வேன் ;

உன்னை வணங்கி சொல்வேன்;

கண்களில் வழியும்

கருணை எங்கள் 

கங்கை என்றே சொல்வேன்!


கண்கள் காட்டும் ஒளியில்; காரிருள் எண்ணம் மறையும் ;

கலங்கம் இன்றி உள்ளம் எங்கள் 

குருவின் பாதம் பணியும்!


மன்னன் காட்டிய வழியில்;

மனிதர் கால்கள் விரையும்;

மாமுனி உந்தன் முன்னே

முழு நிலவும் கூசி மறையும்!


குளிர் தரும் ஒளியே; விழியே;

குருவே எங்கள் வழியே!

தருவாய் நிழலாய் புவிக்கு;

தந்திடு நிம்மதி எமக்கு!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்