வலிமையின் வடிவே நரசிம்மா

வளமும் வலிமையும் வாய்த்திட வேண்டி; வந்து நின்றேன் உன் கண்முன்னே!


வலிமையின் வடிவே வாய்மையின் மொழியே;

வந்தருள் வாயே              ஸ்ரீ நரசிம்மா!


கொண்டவள் மடியில் கொஞ்சிய மொழியில்; கோபம் தணிந்த குணவடிவே!


அஞ்சிடும் கோலத்தில் அரக்கனை அழித்து;

அன்புடன் அணைத்த அருட்கரமே!


எங்கெங்கு காணினும் இறைவன் இருப்பான்; என்பதை விதைத்த விளைநிலமே!


எல்லாம் நீயே வல்லான் நீயே; அருள்வாய் தருவாய் தாயுடனே!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்