கலையின் வாணி

காலை கதிரவன் காட்டிடும் அழகு ;

கலையின் ராணி வாணியின் அழகு!


வீணை கொண்டது விரல்களின் உறவு; வெள்ளை தாமரை மீதவள் கனவு!


உலகின் நாவில் உலவிடும் மொழியது

உணர்வின் வழியாய் உண்மையின் ஒலியது!


விழிகள் காணும் ஒளியின் நிறமது ;

நிலைத்திடும் நினைவில் அவள் தந்த வரமது!


விரல்களின் அசைவில் விளைந்திடும் பயிரது;

வீணையின் நாதத்தில் வளர்ந்திடும் கலையது!


செய்யும் தொழிலதில் வெற்றியின் வழியது;

சேர்ந்திடும் செல்வம் தேவியின் அருளது!


கலையின் வாணி காத்திடும் அழகது;

கவிதைகள் சொல்லா மொழியின் அழகது!


வான் கொண்ட அதிசயம் கண்களின் உறவது;

வாணியின் அருளே வாழ்வதன் கனவது!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்