வேலவன் குமரன்

வேலோடும் மயிலோடும் விளையாடும் திருக்கோலம் உனையன்றி யார் சொல்லடா ?   முருகா உனையன்றி யார் சொல்லடா?


கவி பாடும் உன்னழகை காணாது உளம்  வாடும்

கண்திறந்து பார்ப்பாயடா;

குமரா     காணும்  வழி சொல்வாயடா !


மனங் கவரும் மலர் மாலை 

மயில் காட்டும் தன் தோகை

மனதார கண்டோமடா முருகா

மகிழ்தோடி வந்தோமடா!


எமையாளும் இளங்குமரன்

எழிலான அருள் கோலம்

குறைவின்றி கண்டோமடா

முருகா!

நிறைவோடு நின்றோமடா!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்