மீனாட்சி

பச்சை வண்ண பட்டுடுத்தி;

பாடும் கிளியை விரல் நிறுத்தி;

உச்சியில்  பொன்முடி பின்னிருத்தி;

ஊரை காப்பவள் மீனாட்சி!


அழகாய் வைர மூக்குத்தி;

ஆடும் அதிசய புல்லாக்கு;

எடுப்பாய் நெற்றியில் ஒரு பொட்டு;

ஏன் என்று கேட்கும் முகவெட்டு!


அண்ணன் அழகன் கரையிறங்கி;

கைத்தலம் தந்தான் மனங்கலங்கி;

சொக்கன் ஈசன் உடன் மயங்கி;

ஊரை காப்பவள் மீனாட்சி!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்