அன்னை மகாலக்ஷ்மி
காணும் காட்சி கண்களின் வரமாய் அன்னையை காட்டி நிற்கும்,
கனவிலும் காணா காட்சியாய் வந்து உள்ளத்தில் உறைந்து நிற்கும்,
அன்னை லட்சுமியின் ஆனந்த வடிவம் ஆருயிர் வென்றுவிடும்,
அற்புத யானையின் ஆனந்த கீதம் அறிமுகம் தந்துவிடும்,
பொன்னும் மணியும் கொண்டவள் கோலம் புவியை வென்றுவிடும்,
தாமரை பீடமும் பாதமும் கரமும் தரணியை காத்து நிற்கும்,
மந்திர புன்னகை மலர்ந்த முகமதில் நிலவாய் குளிரந்து நிற்கும்,
மகாலட்சுமி அன்னையின் கோலம் மனதை வென்றுநிற்கும்
Comments
Post a Comment