அன்னை லஷ்மி

அள்ளி தருபவள் அன்னை இவளே ;ஆறுதல் அவளே; அன்னை லட்சுமி,

ஆனந்த மழையே ;அற்புத சுடரே ;அன்னை அவளே; மகாலஷ்மி!


மண்ணின் நனைந்த மழைத்துளி வாசம்; பொன்னை விதைக்கும் கரங்களின் நேசம்,

புதிதாய் விளையும் பூமியின் உயிர்கள்; அன்னை அவள் தரும் ஆனந்த பயிர்கள்,


பஞ்சமும் பசியும் பறந்து மறைந்தது ,

பாரின் மேன்மை அன்னை தந்தது,

செல்லும் வழிதனை சொல்லித்தந்தது; 

செல்வம் பெருகி செழுமை கொண்டது,



அன்னை முகமது அருளைத் தந்தது ;

வெள்ளை யானையில் வலம் இங்கு வந்தது,

கரங்கள் குவிந்து வரங்கள் தந்தது 

காட்டும் மலரில் கவலை பறந்தது,


ஆனந்த மழையே ;அற்புத சுடரே ;

அன்னை அவளே; மகாலஷ்மி!

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்