பரமேஸ்வரா எங்கள் சோமேஸ்வரா
விழியாலே வழியாகும் வெண்பளிங்கு ஒளியாகும்;
கயல் ஆடும் கடலாகும் கண்ணிமைகள் கரையாகும் ;
காணாத காட்சியிங்கு பரமேஸ்வரா'
கண் விழியாலே எமை யாளும் சோமேஸ்வரா,
பிறைநின்ற முகம் ஒன்று;குளிர் ஒளிகாட்டும் வழி நின்று ;
கனல் காட்டும் கண்ணொன்றுபரமேஸ்வரா ;
பகைவென்று எமை காக்கும் சோமேஸ்வரா,
செவ்வானம் சிவந்திங்கு; சிரம் தாங்கும் சிவன் கோலம்;
கலையாத ஓவியமாய் பரமேஸ்வரா; கண்கொண்டோம்
காவல் நீயே சோமேஸ்வரா,
Comments
Post a Comment