எங்கள் பரந்தாமன்
கைகள் ஏந்தி காற்றில் பறக்கும் கருடனை வணங்கி நின்றோம்,
காண கிடைக்காத காட்சியை கண்டு கைகள் கூப்பி நின்றோம்,
கருடா உன்னை கண்டு நின்றோம்,
வெள்ளை மேகமாய் மெல்ல நகர்ந்திடும் கருடன் தோள் மேலே நீலமேகமாய்
விண்ணையாள்பவன் எங்கள் கண்ணனவன்,
சங்கு சக்கர கோலம் கொண்டான்
காக்கும் வானமவன்,
காவல் புரியவே பறந்து வந்தான்
எங்கள் பரந்தாமன்,
Comments
Post a Comment