கண்ணா நீ காலெடுத்து

கண்ணா நீ காலெடுத்து; 

கைகளிலே குழலெடுத்து; 

வண்ண மயில் சிறகசைத்து வா,

வான் மழையாகி நீ இறங்கி வா, 


வழியெல்லாம் பூ இறைத்தோம்;

 வாசலிலே கோலமிட்டோம்; 

வண்ண பொடி தூவி நின்றோம் வா, 

வான் மழையாய் நீ இறங்கி வா, 


கண்ணன் அங்கே பாட்டிசைக்க ;

கார்மேகம்  கால் நடக்க; 

மின்னலென முகம் காட்டி வா,

வான் மழையாகி நீ இறங்கி வா

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்