புன்னை மாரியம்மா
அலையலையாய் ஆயிரம் கரங்கொண்டு அணைப்பாய் தாயே
அன்னை மாரியம்மா எங்கள் புன்னை மாரியம்மா,
புற்றில் இருந்தவள் புதிராய் எழுந்தாய் புன்னை மாரியம்மா
புதிதாய் மலர்ந்த பூப்போல் உள்ளம் நிறைந்தாள் மாரியம்மா,
காண்பவர் மனதை கலக்கம் நீக்கி காக்கும் மாரியம்மா
கண்களின் கண்ணீர் துடைக்கும் கரங்கள் கொண்டவள் மாரியம்மா,
சத்தியம் நேர்மை தருமம் காத்து சாதிக்கும் மாரியம்மா
சதாசிவம் கண்ட சாதனை நாயகி நல்லூர் மாரியம்மா,
புன்னை நல்லூர் மாரியம்மா
புதிதாய் தருபவள் மாரியம்மா
Comments
Post a Comment