அன்னை காந்திமதி
தாயே நீ தா தாயே நீ தா,
தாயே உன் அருள் பார்வை
தளராத உன் கருனை
தடையேதும் இல்லாமல்
தாயே நீ தா தாயே நீ தா,
தனையாளும் மா சக்தி
நிலம் காக்கும் உயிர் சக்தி
நிழலாடும் தருவாக நீ நின்று
தாயே நீ தா தாயே நீ தா,
தாயே எம் காந்திமதி
தந்தாயே பொருணை நதி
தருவாயே கண் திறந்து தாயே
நீ தா தாயே நீ தா
Comments
Post a Comment