யானைமுக கணபதியே
என்னென்ன பேறு பெற்றோம்,
எல்லாமே நாங்கள் பெற்றோம்,
எந்நாளும் பொன்னாளாக்கி
தந்தாய் நீ கணபதியே,
தந்தங்கள் தாங்கி நீயே!
தந்தாய் எம் கணபதியே!
அறிவு தந்து; ஆற்றல் தந்து;
அனைவருக்கும் அன்பைத் தந்து;
ஆதரிக்கும் தெய்வம் நீயே!
யானை முக கணபதியே!
அன்னையிடம் பாசம் கொண்டாய்;
தந்தையிடம் ஞானம் கொண்டாய்;
தம்பியை தாங்கி நிற்கும்;
தமையனாகி நின்றாய் அன்பாய்,
எல்லாமே சொல்லித் தந்து;
எம்முடனே சேர்ந்து நின்று;
எந்நாளும் காத்திருக்கும்'
எங்கள் இல்லத் தெய்வம் ஆனாய்!
காத்திருந்து நோன்பிருந்து;
கனிந்த நற்பழங்கள் தந்து;
கரும்புடனே கொழுக்கட்டை கொண்டு;
அன்புடனே அருகம்பில்லாள்
ஆசையுடன் வணங்கி நிற்போம்,
ஆதரிப்பாய் எம்மையென்றும்
யானைமுக கணபதியே!
அன்புடனே தாள் பணிந்தோம்
ஆதரிப்பாய் கணபதியே!
Comments
Post a Comment