அன்னை லஷ்மி

 உண்மை செல்வம் வேண்டும் எனக்கு

 உன்னை வணங்கும் தாயே எனக்கு,


மனதில் மகிழ்ச்சி நாளும் வளர்ச்சி 

தந்திட வேணும் தாயே லட்சுமி,


சேரும் செல்வம் நிலைத்திடவேணும் உறவுகள் என்றும் உடன்வரவேண்டும்,


உலகம் முழுவதும் வலம் வரவண்டும் 

ஊரார் அனைவரும் உடன் வரவேண்டும்,


கண்களின் ஒளிதனில் கருணை வேண்டும் காண்பவர் யாவரும் நலம் பெறவேண்டும்,


காப்பாய் தாயே 

கருணைக் கடலே 

காப்பவன் துணையே கரியவன் இணையே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்