எங்கள் செல்ல விநாயகன்

 பச்சை வண்ணம் கொண்ட வெற்றிலையும் 

மஞ்சள் முகம் கொண்ட மலர் நிறமும் 

என்றும் ஒளிதரும் நெய் விளக்கும் 

உன்முன் பணிந்திடும் இருகரமும் ,


வேழமுகம் கண்டு விழிகசியும்,

வேண்டும் வரம்பெற்று மனம் நிறையும்,

விண்ணில் பிறந்ததிட்ட முழுநிலவும்,

மண்ணில் இறங்கி 

உனைக் காட்டும்,


எங்களின் செல்ல நாயகனே நீ

என்றும் அருளும் விநாயகனே,

எங்கள் விநாயகனே 

விக்ன விநாயகனே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்