ஏழுமலையான்

 ஏழு மலைகளின் நடுவில் கண்டேன் 

இதயம் முழுவதும் உன்னை கொண்டேன்


உயிரின் வேராய் உன்னை கொண்டேன்

உன் முகம் கண்டபின் என் முகம் மறந்தேன்


ஏழு நிறமதின் ஏக்கம் குறைந்தது

ஏழு மலையான் தோள்களை பணிந்தது


ஏங்கிடும் விழிகள் விடியலை கண்டது

ஏனென்ற கேள்விகள் எங்கோ மறைந்தது


கார்மேகன் அழகு மழையென நனைத்தது

கண்ணனை நினைத்தே காலங்கள் நகர்ந்தது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்