குரு ராகவேந்திர
மண்ணில் நின்ற கால்கள் இங்கே;
விண்ணை யளந்து விடை பல தந்தது,
மந்திராலய மைந்தனின் விழிகள் ;
விடியலை அழைத்தது இருளும் அகன்றது,
கைகள் நீரினை தாரை வார்த்தது;
தம்மை தந்து நம்மை காத்தது,
சந்தியில் வந்தனம் தலைவன் செய்தது;
சாயும் மனதை தாங்கி நின்றது,
குருவின் அருளால் குலமும் தழைத்தது;
கும்பிட்ட கரங்களை கண்ணீர் நனைத்தது,
நல்லவன் தந்த நாளும் இனித்தது;
நன்றியை உள்ளம் உயிராய் கொண்டது,
ராக வேந்திரா யென்னும் ராகம்;
நெஞ்சில் நிலைத்தது நாவில் இனித்தது,
நாளும் பாடும் நாமம் காத்தது;
நல்லதை யெல்லாம் அள்ளித் தந்தது,
ராகவேந்திரா;ராகவேந்திரா
ராகவேந்திரா;ராகவேந்திரா
Comments
Post a Comment