அன்னை மகாலக்ஷ்மி
மடியேந்தி வரும் உன்னை மடிமீது சேயாக்கி
மனம் குளிர தந்திடுவாள் மகாலட்சுமி,
மண்ணின் தாயாக தனைக் கொண்டாள் மகாலட்சுமி,
மலர்மீது தான் அமர்ந்து மலர் போன்ற
கரம் காட்டி மாளாது தந்திடுவாள் மகாலட்சுமி,
செல்வம் சேர்த்துனக்கு தந்திடுவாள் மகாலட்சுமி,
கண் காட்டும் கருனை உள்ளம்
கவிபாடும் உன் கோலம் காட்சி கொண்டாள் மகாலட்சுமி,
காலமெல்லாம் காத்து நிற்பாள் மகாலட்சுமி
Comments
Post a Comment