வேலவன் அவனே
வேலுடன் மயிலுடன் யார் வருவார் ?
வேலன் அவனின்றி இங்கு யார் தருவார்!
கூடும் முகில் போல் யார் வருவார்?
கொட்டும் மழை தன்னை
இங்கு யார் தருவார்!
மனதில் குறையெதும் எமக்கு இல்லை;
மறையவன் மைந்தனால் குறைவுமில்லை!
ஓடும் நதியின்றி உயிர்கள் இல்லை;
ஓம் என்னும் சொல்லின்றி உயர்வு மில்லை!
கண்கள் காண்பது கனவுமில்லை;
காப்பான் வேலன் என்றும்
பொய்யுமில்லை!
Comments
Post a Comment