குரு ராகவேந்திர

 என்றென்றும் ஒளியாக நீ வாராய் -   எங்கள் 

கண் ணென்றும் ஏங்கிடும் நீ வாராய்


மண் நின்று வாழ்ந்திட வரம் தாராய் - எங்கள்

மத்வரின் சீடரே நீ வாராய்


வானின் ஒளியாக முன்வந்து வரம் தந்தான்

மூல ராமனே முன்நின்று கரம் கொண்டான்


தணியாத அருள்தாகம் தனைக் கண்டான்

தன்னையே தந்துனக்கு அதை வென்றான்


காணாத ஒளிகாண கண்தந்தாய் -எங்கள்

காவலனாய் காத்திருந்து வழிதந்தாய்


மண்மீது வாழ்வதில் ஓர் பயன் தந்தாய் -எங்கள்

மத்வரின் சீடரே நீ எமை வென்றாய்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்