குரு ராகவேந்திர
கரம் ஒன்று தருவார் பலம் தந்து அருள்வார் பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தான்
கரம் கொண்டு தொழுது கண்ணிமை மறந்து
கால்களில் பணிவோம் குருவிடம் தான்
பூஜ்யஸ்ரீ ராகவேந்திர குருவிடம் தான்
மூல ராமனை இதயம் கொண்டவர்
முடிவில்லாத வாழ்வில் நுழைந்தவர்
எளியவர் வாழ்வின் இதயம் தான்
இருளதன் வழியதில் ஒளியவர் தான்
இறைவழி தந்த பகலவன் தான்
என்றும் வாழ்வதன் வழியவர் தான்
பூஜ்யஸ்ரீ ராகவேந்திரர் தான்
Comments
Post a Comment