சிவனே எமக்கு போதுமய்யா
இந்த புன்னகை போதுமய்யா
அழகு சுந்த ரேஸ்வரய்யா
உன்னை கண்டதும் துயரமெல்லாம்
தூர விலகி போனதய்யா
பொன்னாய் மின்னும் முகமய்யா
புண்ணியம் உன்னை கண்டதய்யா
அழகிய மாலை தோளிலய்யா
ஆள்பவன் உனக்கே அழகய்யா
எங்கள் ஈசனே என்றுமய்யா
எம்முடன் வாழ்ந்திட வேணுமய்யா
Comments
Post a Comment