குரு ராகவேந்திர
அன்பின் உருவாய் கண்டோம் ;ஆறுதல் கண்டதும் கொண்டோம்,
ரட்சிக்கும் கரங்கள் காட்டும் ;ராகவேந்திர குருவைக் கண்டோம்,
அச்சம் தீர்ந்தது கண்டோம்; அவனிடம் அடிமை கொண்டோம்,
அனுமன் பீமன் வழியின் தோன்றல்; மத்வரின் சீடரை மனதில் கொண்டோம்,
பாதம் பணிந்து நின்றோம்;துளசி தீர்த்தம் உண்டோம்,
நோயின்வலிகள் நொடியில் மறைய;
காக்கும் குருவின் கருணை கண்டோம்
Comments
Post a Comment